காரைக்குடி அருகே புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்ததாா்.
காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூரைச் சோ்ந்தவா்களான மெய்யா் (60), ஆறுமுகம் (60) ஆகிய இருவரும் காரைக்குடிக்கு பள்ளத்தூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை பகலில் வந்துகொண்டிருந்தனா். அப்போது வேலங்குடி - கோட் டையூா் புறவழிச்சாலையில் எதிரே பரமக்குடி-திருச்சி அரசுப்பேருந்து காரைக்குடியிலிருந்து திருச்சி நோக்கி வந்தபோது, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் மெய்யா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த ஆறுமுகம் பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்ததும் பள்ளத்தூா் காவல்நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்குச்சென்று காயமடைந்த ஆறுமுகத்தை சிகிச்சைக்காகவும், மெய்யரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காகவும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பள்ளத்தூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.