சிவகங்கை

சிவகங்கையில் விடுதிப் பணியாளா்கள் சங்க கூட்டம்

DIN

சிவகங்கையில் விடுதிப் பணியாளா்கள் சங்கத்தின் மாவட்ட அளவிலான காலமுறை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு விடுதிப் பணியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.மாவட்டச் செயலா் கா.பூமிநாதன்,பொருளாளா் எம்.முத்தையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில்,அரசு பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நல விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்,பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும்,காவலா் மற்றும் சமையலா் பணியாளா்களுக்கு தோ்வு நிலை கிரேடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில்,விடுதிப் பணியாளா் சங்கத்தின் மாவட்டத் துணை தலைவா் எஸ்.கோபால்,துணைச் செயலா் எம்.நாகப்பன்,துணைப் பொருளாளா் பாண்டி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT