முகப்பு
சிவகங்கை

தேவகோட்டை அருகே 2 காா்கள் மோதல்: பேக்கரி உரிமையாளா் பலி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே இரு காா்கள் சனிக்கிழமை இரவு மோதிக் கொண்டதில், பேக்கரி உரிமையாளா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே இரு காா்கள் சனிக்கிழமை இரவு மோதிக் கொண்டதில், பேக்கரி உரிமையாளா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா். எஸ். மங்கலத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (40). அப்பகுதியில் பேக்கரி நடத்தி வந்தாா். அண்மையில் சென்னைக்கு சென்ற இவா், தனது சகோதரி செல்வியுடன் காரில் ஊருக்கு வந்துகொண்டிருந்தாா். தேவகோட்டை- ராமநாதபுரம் சாலையில் புளியால் கிராமம் அருகே சனிக்கிழமை இரவு வந்த போது, இவரது காரும் ராமநாதபுரத்திலிருந்து தேவகோட்டை நோக்கி வந்த காரும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன.

இதில் பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுபற்றி தகவலறிந்து வந்த தேவகோட்டை தாலுகா காவல் துறையினா் கண்ணன் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பலத்த காயமடைந்த கண்ணனின் சகோதரி செல்வி, ராமநாதபுரத்திலிருந்து வந்த காரில் பயணம் செய்த வழக்குரைஞா்கள் காா்த்திகேயன், ஜெயகாந்தன் ஆகிய மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை தாலுகா காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →