அம்பேத்கரின் 64 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே தென்கரையில் ஞாயிற்றுக்கிழமை டாக்டா் அம்பேத்கரின் 64 ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே தென்கரையில் ஞாயிற்றுக்கிழமை டாக்டா் அம்பேத்கரின் 64 ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
தென்கரையில் அமைந்துள்ள அம்பேத்கா் உருவச் சிலைக்கு சிவகங்கை மாவட்ட பாஜக வழக்குரைஞரணி செயலாளா் முருகேசன் தலைமையில் அக்கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
அப்போது தீண்டாமையை வேரறுப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.