ஷாவ்மி 17, ஷாவ்மி 17 அல்ட்ரா விற்பனை தொடக்கம்!
புதிய தயாரிப்பான ஷாவ்மி 17 மற்றும் ஷாவ்மி 17 அல்ட்ரா விற்பனை இந்திய சந்தையில் இன்று தொடங்கியுள்ளது.
ஷாவ்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஷாவ்மி 17 மற்றும் ஷாவ்மி 17 அல்ட்ரா விற்பனை இந்திய சந்தையில் இன்று தொடங்கியுள்ளது.
ஸ்நாப்டிராகன் 8 எலைட் 5 ஆம் தலைமுறை புராசஸர், 3,500 nits திரைப் பிரகாசம் போன்றவை இந்த ஸ்மார்ட்போனின் சிறப்புகளாகப் பார்க்கப்படுகின்றன.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாவ்மி நிறுவனம் இந்திய பயனர்களுக்கு ஏற்ப புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் ஷாவ்மி 17, ஷாவ்மி 17 அல்ட்ரா ஆகிய இரு தயாரிப்புகள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளன.
Advertisement
Advertisement
12GB உள்நினைவகம் (RAM) + 256GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 89,999.
512GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 99,999.
எஸ்பிஐ வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளருக்கு ரூ. 10,000 விலை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இரு ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 4 மாதங்களுக்கு ஸ்பாடிஃபை செயலியை சப்ஸ்கிரிப்ஷன் இல்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சிறப்பம்சங்கள்
ஷாவ்மி 17 ஸ்மார்ட்போன், 6.3 அங்குல ஓ.எல்.இ.டி. திரை கொண்டது
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 3,500 nits வழங்கப்பட்டுள்ளது.
ஷாவ்மி 17 அல்ட்ரா, 6.9 அங்குல அமோலிட் திரை கொண்டது.
3,500 nits திரை பிரகாசமும், சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறனும் உடையது.
இரு ஸ்மார்ட்போன்களுமே ஸ்நாப்டிராகன் 8 எலைட் 5 ஆம் தலைமுறை புராசஸர் உடையது.
ஷாவ்மி 17 6,330mAh பேட்டரி திறன் பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 100W திறன் கொண்டது.
ஷாவ்மி 17 அல்ட்ரா, 6,000mAh பேட்டரி திறன் கொண்டது. வேகமாக சார்ஜ ஆகும் வகையில் 90W திறன் கொண்டது.
Xiaomi 17, Xiaomi 17 Ultra smart phone go on sale in India: Prices, offers, and key specs
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.