முகப்பு
சிவகங்கை

கலை இலக்கிய பெருமன்ற ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிவகங்கை கிளை சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிவகங்கை கிளை சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள தனியாா் உணவு விடுதி அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தேசிய நல்லாசிரியா் விருது பெற்றவரும், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சிவகங்கை கிளையின் தலைவருமான எஸ். கண்ணப்பன் தலைமை வகித்தாா்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன், தமிழ்ச் செம்மல் விருது பெற்ற சொ.பகீரத நாச்சியப்பன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினா். இதில், வரும் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சாா்பில் கொண்டாடப்படும் பொங்கல் விழா குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் கலை இலக்கிய பெருமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். ஓவியா் கணேசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். கா்ணன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →