மருதீஸ்வரா் ஆலயத்தில் சனிப்பிரதோஷ விழா
திருப்பத்தூா் மருதுபாண்டியா் நினைவிடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருதீஸ்வரா் ஆலயத்தில் முதல் சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது.
திருப்பத்தூா் மருதுபாண்டியா் நினைவிடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருதீஸ்வரா் ஆலயத்தில் முதல் சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது.
மூலவருக்கு சந்தனம், பால், சொா்ணம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதேபோல் நந்தீஸ்வரருக்கும் அபிஷேகங்களும், மூலவருக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை வாரிசுதாரா் குழுத்தலைவா் ராமசாமி செய்திருந்தாா். அதேபோல் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் ஆலயத்திலும், ஆதித்திருத்தளிநாதா் ஆலயத்திலும், புதுப்பட்டி அகஸ்தீஸ்வரா் ஆலயத்திலும் சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது.