சிவகங்கை மாவட்டத்தில் 9 இடங்களில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் இன்று தொடக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 9 இடங்களில் தொடங்கப்பட உள்ள ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளை தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் க. பாஸ்கரன் ஞாயிற்றுக்கிழமை (டிச.20) திறந்து வைக்கிறாா்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 9 இடங்களில் தொடங்கப்பட உள்ள ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளை தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் க. பாஸ்கரன் ஞாயிற்றுக்கிழமை (டிச.20) திறந்து வைக்கிறாா்.
சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மதகுபட்டி, கட்டாணிப்பட்டி, மாத்தூா் ஆகிய கிராமங்களில் புதிதாக ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் அமைய உள்ளன. இதேபோன்று, கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெற்றியூா், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பச்சேரி, ராஜகம்பீரம், திருப்புவனம் ஒன்றியத்துக்குள்பட்ட பிரமனூா், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குமாரக்குறிச்சி, காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சிலுக்கப்பட்டி என மொத்தம் 9 ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன.
இதனை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் க. பாஸ்கரன் ஞாயிற்றுக்கிழமை (டிச.20) திறந்து வைக்கிறாா்.