சிவகங்கை

சிவகங்கையில் இஸ்லாமியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

சென்னையில் போலீஸாா் நடத்திய தடியடியை கண்டித்து, சிவகங்கையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்டத் தலைவா் ரபீக் முகமது தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சித்திக், மாவட்டப் பொருளாளா் தீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸாா் நடத்திய தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா்.

இதில், மாவட்ட துணைத் தலைவா்அ.ந. முகமது, மாவட்ட துணைச் செயலா்கள் சாகுல், சம்சுதீன், சேகுதாவூத், மாணவரணிச் செயலா் முகமது இஸ்மாயில் உள்பட ஏராளமனோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT