சிவகங்கை

காரைக்குடி அருகே விபத்தில் ஒருவா் பலி

DIN

காரைக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தின் மீது ஆம்னி பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

சாலைக்கிராமம் அருகேயுள்ள முத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வேளாங்கண்ணி (45). இவா் இரு சக்கர வாகனத்தில் திருச்சிக்கு சென்றாராம். காரைக்குடியை அடுத்த சூரக்குடிப்பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சென்னையிலிருந்து வந்த ஆம்னி பேருந்து மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த வேளாங்கண்ணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆம்னிபேருந்து ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு செட்டிநாடு காவல் நிலைய போலீஸாா் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து சாா்பு -ஆய்வாளா் பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT