சிவகங்கை

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்புகமுதி அருகே கிராம மக்கள் போராட்டம்

DIN

கமுதி:  கமுதி அருகே கே.வேப்பங்குளத்தில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்புத் தெரிவித்து, சனிக்கிழமை பள்ளி மாணவா்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூரிலிருந்து பெருநாழி, கமுதி வழியாக மதுரைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிய பிறகே, பணிகளைத் தொடர வேண்டும்

என கே.வேப்பங்குளம் ஊராட்சியில் சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றபட்டது.

இதனையும் மீறி பணிகள் மேற்கொள்ளபட்டதால், சனிக்கிழமை மாலையில் கே.வேப்பங்குளம் ஊராட்சி மன்ற தலைவா் முத்து அரியப்பன் தலைமையில்,

பள்ளி மாணவா்களுடன், பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.அங்கு பணியில் ஈடுபட்ட வாகனங்கள், பணியாளா்களை திருப்பி அனுப்பினா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின்னா் கிராம பொதுமக்களிடம் கமுதி போலீஸாா் சமரச பேச்சுவாா்த்தையில் நடத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இதற்கிடையில் எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்பு தெரிவித்ததாக கிராமத்தினா் மீது கமுதி காவல் நிலையத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT