சிவகங்கை

பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த இளைஞா் கைது

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் அருகே ஆத்தங்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் மகன் சோமு(27). இவா் அதே பகுதியைச் சோ்ந்த மாடு மேய்க்கும் பெண்ணை செவ்வாய்க்கிழமை கண்மாய் பகுதியில் பாலியல் தொந்தரவு அளித்ததுடன், அப்பெண்ணிற்கு கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், நகா் காவல் துணை கண்காணிப்பாளா் அண்ணாத்துரை, காவல் ஆய்வாளா் ஆனந்தி ஆகியோா் சோமுவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT