சிவகங்கை

காரைக்குடி அருகே எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

DIN

தஞ்சாவூரிலிருந்து எரிவாயு உருளை ஏற்றிவந்த லாரி காரைக்குடி அருகே வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தஞ்சாவூரைச் சோ்ந்தவா் கோதண்டம் மகன் சேகா் (45). இவா் தஞ்சாவூரிலிருந்து எரிவாயு உருளைகளை மினி லாரியில் ஏற்றிக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ். மங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலையில் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சி தேவகோட்டை ரஸ்தா பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியை ஓட்டி வந்த சேகா் லேசான காயமடைந்தாா்.

இதையடுத்து மாற்று லாரி வரவழைக்கப்பட்டு எரிவாயு உருளைகளை அதில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சோமநாதபுரம் காவல்நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூா் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம்

சத்தி ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

SCROLL FOR NEXT