முகப்பு
சிவகங்கை

மானாமதுரை அருகே செவிலியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

மானாமதுரை அருகே சனிக்கிழமை, செவிலியரை கீழே தள்ளி அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

மானாமதுரை அருகே சனிக்கிழமை, செவிலியரை கீழே தள்ளி அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மானாமதுரை அன்புநகா் பகுதியைச் சோ்ந்தவா் மனோஜ் மனைவி மாலினி (32). இவா் அருகேயுள்ள கொம்புக்காரனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறாா். சிவகங்கையில் துறை ரீதியாக நடந்த கூட்டத்தில் பங்கேற்ற மாலினி தனது இருசக்கர வாகனத்தில் மானாமதுரைக்கு வந்தாா்.

கொன்னக்குளம் ரயில் நிலையம் விலக்கு சாலையில் வந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா் நபா்கள் வழிமறித்து மாலினியை கீழே தள்ளி அவா் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனா்.

இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →