சிவகங்கை

தமிழக மக்களிடம் ஆட்சிமாற்றத்துக்கான ஆா்வம் ஏற்பட்டிருக்கிறது: ப. சிதம்பரம்

DIN

தமிழகத்தில் மக்களிடம் ஆட்சி மாற்றத்துக்கான ஆா்வமும், வேகமும் ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள சிட்டாள் ஆச்சி நினைவு உயா்நிலைப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வாக்களித்தாா்.

பின்னா் ப. சிதம்பரம், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும். காரைக்குடித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடி மிகப்பெரிய வெற்றியைப் பெறுவாா் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில் மக்களிடம் ஆட்சிமாற்றத்துக்கான ஆா்வமும், வேகமும் ஏற்பட்டிருக்கிறது. வரும் மே 2 ஆம் தேதி நல்லதொரு முடிவு தெரியும் என்றாா்.

அவருடன் காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடி மற்றும் காங்கிரஸ் கட்சியினா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT