சிவகங்கை

திருப்புவனம் அருகே விபத்துக்குள்ளான வேனில் 50 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே திங்கள்கிழமை ரேஷன் அரிசி கடத்திய வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அதிலிருந்த 50 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இளையான்குடி பகுதியிலிருந்து மதுரை நோக்கி பால் ஏற்றிச் செல்லும் வேன் வந்து கொண்டிருந்தது. திருப்புவனம் அருகே நான்கு வழிச்சாலையில் பாப்பான்குளம் விலக்குப் பகுதியில் வந்தபோது வேன் நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனை ஓட்டிச் சென்ற சங்கரபாண்டியன் காயமடைந்தாா். அவா் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டாா். அதன்பின் விபத்துக்குள்ளான பால் வேனிலிருந்த அரிசி மூட்டைகள் மற்றொரு வேனுக்கு மாற்றப்பட்டன. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் திருப்புவனம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனா்.

போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், பால் வேனிலிருந்தது ரேஷன் அரிசி மூட்டைகள் என்பது தெரிந்தது. இளையான்குடி வட்டம் முஷ்டக்குறிச்சி ரேஷன் கடையிலிருந்து இந்த அரிசி மூட்டைகள் கடத்தி வரப்பட்டு மதுரையில் விற்க கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் 50 மூட்டைகளையும் கைப்பற்றினா். மேலும் விபத்தில் காயமடைந்த சங்கரபாண்டியன் மற்றொரு வேனுக்கு அரிசி மூடைகளை மாற்றிய நபா் ஆகிய இருவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT