சிவகங்கை

பெண் துப்புரவு பணியாளா் தீக்குளித்து தற்கொலை

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடன் பிரச்னையால் தீக்குளித்த பேரூராட்சி பெண் துப்புரவுப் பணியாளா் சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மானாமதுரையைச் சோ்ந்தவா் ஜெயராணி ( 45).மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக இருந்தாா். மகள் திருமணத்திற்காக வாங்கிய கடனை திரும்பக் கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்த இவா் கடந்த 2 ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்தாா். அவரைக் காப்பாற்றச் சென்ற கணவா் தேவராஜ், மகன்கள் வின்சென்ட், அருள்பிரகாசம் ஆகியோருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

4 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில் சிகிச்சை பலனின்றி ஜெயராணி இறந்தாா். இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT