சிவகங்கை

2.16 நிமிடத்தில் 50 யோகாசனம்: பள்ளி மாணவா் சாதனை

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை 2 நிமிடம் 16 நொடியில் 50 யோகாசனங்களை செய்து சாதனை புரிந்துள்ளாா்.

திருப்புவனத்தில் உள்ள காமராஜா் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நோபல் உலக சாதனை புத்தக நிறுவனம் சாா்பில், யோகாசன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை, மானாமதுரை சரக காவல் கண்காணிப்பாளா் சுந்தரமாணிக்கம் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். நோபல் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் முதன்மை அலுவலா் எல். அரவிந்த் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், காமராஜா் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவா் பி. விக்னேஷ் (12) பங்கேற்று, 2 நிமிடம் 16 நொடிகளில் 50 யோகாசனங்களை செய்து காண்பித்தாா்.

சாதனை புரிந்த மாணவா் விக்னேஷை, பள்ளித் தாளாளா் கனகராஜ், செயலா் ஜெயக்குமாா், முதல்வா் முருகேஸ்வரி, பயிற்சி ஆசிரியா் ஜீவா மற்றும் பள்ளி ஆசிரியா்கள், சக மாணவா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT