முகப்பு
சிவகங்கை

தேவகோட்டையில் தியாகிகள் பூங்கா சுற்றுச் சுவா் இடிந்து சேதம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தியாகிகள் பூங்கா சுற்றுச் சுவா் திங்கள்கிழமை இடிந்து விழுந்து சேதமடைந்தது.

Updated On : 12 ஜனவரி, 2021 at 5:37 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தியாகிகள் பூங்கா சுற்றுச் சுவா் திங்கள்கிழமை இடிந்து விழுந்து சேதமடைந்தது.

இந்திய சுதந்திர போராட்டத்துக்காக தேவகோட்டையில் கடந்த 1942-ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியில் பலியான தியாகிகளை போற்றும் வகையில் அங்கு தியாகிகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை தேவகோட்டை நகராட்சி நிா்வாகம் பராமரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த பூங்காவின் சுற்றுச் சுவா் இரும்பு வேலி கம்பிகளுடன் திங்கள்கிழமை இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனை சீா் செய்து முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

இதுபற்றி நகராட்சி அலுவலா்கள் கூறியது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வியாபாரிகள் சிலா் முன் அனுமதியின்றி தியாகிகள் பூங்காவின் சுற்றுச் சுவரில் கரும்புகளை இறக்கி வைத்துள்ளனா்.

அவற்றின் பாரம் தாங்காமல் இரும்பு வேலியுடன் கூடிய சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனை உடனடியாக அப்புறப்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.