கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது
கேரளத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேச பெண்கள் உள்பட 8 பேர் கைது
கேரளத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேச பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம், கார்யவட்டத்தில் வங்கதேச பெண்கள் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பதாக பயங்கரவாத தடுப்புக் குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கார்யவட்டத்தில் தடுப்புக் குழுவினர் சோதனை மேற்கொண்டபோது, ஒரு வாடகை வீட்டில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வந்ததும், அந்தக் கும்பலில்தான் வங்கதேச பெண்கள் இருப்பதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, வங்கதேச பெண்கள் இருவரையும், பாலியல் தொழிலில் ஈடுபட்ட மேலும் 6 பேரையும் பயங்கரவாதத் தடுப்புக் குழுவினர் கைது செய்தனர்.
Advertisement
Advertisement
கைது செய்யப்பட்டவர்கள், இம்மாதத் தொடக்கத்தில் மருத்துவர்களைப்போல நடித்து ஒரு வீட்டை வாடகை எடுத்து, பாலியல் தொழில் நடத்தி வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட வங்கதேச பெண்கள் இருவர் மீதும், சட்டவிரோதமாகக் குடியேறியதற்காகவும், பாலியல் தொழில் தொடர்பாகவும் தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.