விண்ணப்பித்துவிட்டார்களா..? பெண்கள் சேவை மையத்தில் பெண்களுக்கு வேலை!
கோவை மாவட்ட சமூக நலத்துறையின்கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையத்தில் பணிகளுக்கு விண்ணப்பிப்பது குறித்து...
கோவை மாவட்ட சமூக நலத்துறையின்கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையத்தில் கீழ்வரும் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்வரும் அனைத்து பணிகளுக்கும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
இது குறித்த விபரம் வருமாறு:
பணி: CaseWorker
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.18,800
தகுதி: Social Work,Sociology, Psychology, Clinical Psychology போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று பெண் களுக்கு எதிரான வன்முறை களை தடுக்கும் வகையில் செயல்படும் அரசு / அரசு சாரா நிறுவனங்களில் குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: IT Staff
காலியிடம்: 1
சம்பளம்: ரூ.20,000
தகுதி:, ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்புடன் கம்ப்யூட் டர், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Multipurpose Helper
காலியிடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: 8 ஆம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் சமையல் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: Security Guard
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். Security பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதி யானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.coim batore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிற்க்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 30.5.2026