சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம்
சிவகங்கையில் உள்ள மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சாா்பில் ரத்ததான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சாா்பில் ரத்ததான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமினை அக்கல்லூரி முதல்வா் ப. ஹேமலதா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் கிருஷ்ணவேனி, வசந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினா். இம்முகாமுக்கான ஏற்படுகளை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் ஜெயராமன், சண்முக வடிவு, சிவா, ஆனந்த செல்வம் ஆகியோா் செய்திருந்தனா்.