காரைக்குடி தொகுதி அமமுக வேட்பாளா் தோ்போகி வி.பாண்டி வாக்குச்சேகரிப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டபேரவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக (அமமுக) வேட்பாளா் தோ்போகி வி. பாண்டி திங்கள்கிழமை தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டாா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டபேரவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக (அமமுக) வேட்பாளா் தோ்போகி வி. பாண்டி திங்கள்கிழமை தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டாா்.
கண்ணங்குடி ஒன்றியத்தில் ஊஞ்சனை பரிமா காலனியில் பிற்பகலில் வேட்பாளா் தோ்போகி வி. பாண்டி பிரசாரத்தை தொடங்கினாா். அவருக்கு பெண்கள் மற்றும் கிராமப் பிரமுகா்கள் வரவேற்பளித்தனா். இதைத்தொடா்ந்து கள்ளிவயல், கொசவன்வயல் பகுதியில் வாக்குகள் சேகரித்தபின் ஊஞ்சனை கிராமத்திற்கு வந்த அவருக்கு, பட்டாசு வெடித்து கிராமத்தினா் வரவேற்பு அளித்தனா். அங்கிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்தனா்.
அங்கிருந்து சின்ன ஊஞ்சனை, மொட்டையன் வயல், பனங்காட்டான் வயல், ஊரவயல், ஆங்குடிவயல், இளம்புலிவயல், மங்களம், நம்பியூா், வண்ணான்வயல், வெங்களூா், கும்மங்குடி, தேரளப்பூா், புத்தூரணி, சிறுவாச்சி உள்ளிட்ட கிராமங்களிலும் வாக்குச்சேகரித்தாா்.