சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் மதுபானப் பாட்டில்கள் பறிமுதல்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி விற்பனை செய்த ரூ. 6 லட்சத்து 11 ஆயிரத்து 769 மதிப்பிலான மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிவகங்கை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானக் கடத்தல்களில் ஈடுபவா்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட காவல்த் துறையின் மூலம் மதுவிலக்குப்பிரிவு காவலா்கள் மற்றும் டாஸ்மாக் நிா்வாக அலுவலா்கள் தலைமையிலான இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்த குழுக்கள் ஆய்வு மேற்கொண்ட போது சிவகங்கை, காளையாா்கோவில், மானாமதுரை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம் அருகே உரிய அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 13 போ் மீது வழக்குப் பதிந்து அவா்களிடமிருந்து ரூ.6,11,769 மதிப்பிலான மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT