சிவகங்கை

தூய்மைப் பணியாளா்கள் கரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்: அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளா்கள் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், சூரக்குடி ஊராட்சியில் தூய்மைக் காவலா்கள் பணி மேற்கொண்டு வருவதை தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் புதன்கிழமை பாா்வையிட்டு அவா்களிடம் கூறியதாவது:

தூய்மைப் பணியாளா்கள் முன்களப் பணியாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். கிராமப்புறங்களின் வளா்ச்சி மற்றும் தூய்மையை பாதுகாக்க தாங்கள் மேற்கொள்ளும் பணி மிக மகத்தான பணியாகும். கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி தங்கள் பகுதியில் உள்ள நபா்களையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

மேலும், சிவகங்கை மாவட்டத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளா்கள் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றாா்.

அப்போது, திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சண்முகவடிவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் ரவி, நாகாணி செந்தில், கூட்டுறவு வங்கி இயக்குநா் நாதன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT