மானாமதுரையில் கொட்டித் தீர்த்த மழை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வியாழக்கிழமை காலையில் தொடங்கிய மழை மாலை வரை தொடர்ந்ததால் பகல் பொழுது மாலைப்பொழுது போல் காணப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வியாழக்கிழமை காலையில் தொடங்கிய மழை மாலை வரை தொடர்ந்ததால் பகல் பொழுது மாலைப்பொழுது போல் காணப்பட்டது.
மழையால் வாரச் சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. மானாமதுரை பகுதியில் கடந்த இரு நாட்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் பெய்ய தொடங்கியுள்ளது காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மானாமதுரை பகுதியில் காலையில் வானம் மந்தமாக காணப்பட்டது.
அதன்பின்னர் சாறலாகவும் பலமாகவும் காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்த மழையால் பகல் பொழுது மாலைப்பொழுது போல் காணப்பட்டது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் மானாமதுரையில் வாரச் சந்தை நடைபெறும். மழையால் வாரச்சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. காய்கறிகள் வாங்க பொதுமக்கள் அதிகமாக வராததால் வியாபாரிகள் கொட்டும் மழையில் மாலையில் காய்கறிகளின் விலையை குறைத்து வியாபாரம் செய்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.