சிவகங்கை

மானாமதுரையில் கொட்டித் தீர்த்த மழை

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வியாழக்கிழமை காலையில் தொடங்கிய மழை மாலை வரை தொடர்ந்ததால் பகல் பொழுது மாலைப்பொழுது போல் காணப்பட்டது.

மழையால் வாரச் சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. மானாமதுரை பகுதியில் கடந்த இரு நாட்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் பெய்ய தொடங்கியுள்ளது காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மானாமதுரை பகுதியில் காலையில் வானம் மந்தமாக காணப்பட்டது.

மானாமதுரையில் தொடர் மழையால் பகல் பொழுது மாலைப்பொழுது போல் காணப்பட்டது.

அதன்பின்னர் சாறலாகவும் பலமாகவும் காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்த மழையால் பகல் பொழுது மாலைப்பொழுது போல் காணப்பட்டது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் மானாமதுரையில் வாரச் சந்தை நடைபெறும். மழையால் வாரச்சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. காய்கறிகள் வாங்க பொதுமக்கள் அதிகமாக வராததால் வியாபாரிகள் கொட்டும் மழையில் மாலையில் காய்கறிகளின் விலையை குறைத்து வியாபாரம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT