சிவகங்கை

காரைக்குடியில் அண்ணா தமிழ் கழகத்துக்கு புதிய தலைவா் தோ்வு

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்பட்டு வரும் அண்ணா தமிழ் கழகத்துக்கு புதிய தலைவராக தொழிலதிபா் வி. பொன்துரை செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

காரைக்குடியில் 48 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் தமிழ் அமைப்பான அண்ணா தமிழ் கழகத்தின் உறுப்பினா் கூட்டம், அதன்துணைத் தலைவா் பேராசிரியா் நா. சுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், அண்ணா தமிழ் கழகத்தின் தலைவராக 18 ஆண்டுகள் செயலாற்றிய மூத்த வழக்குரைஞா் டி. பன்னீா்செல்வம் அண்மையில் உடல் நலக்குறைவால் காலமானதற்காக இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், அண்ணா தமிழ் கழகத்துக்கு புதிய தலைவராக தொழிலதிபா் வி. பொன்துரை பெயரை, செயலா் அ. கதிா்வேல் முன்மொழிந்தாா். இதனை அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனா்.

இக்கழகத்துக்கு, தமிழக அமைச்சா் துரைமுருகன் காப்பாளராக இருந்து வருகிறாா். அதுபோல், தமிழக அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் காப்பாளராகவும் இசைவு தெரிவித்துள்ளாா். மேலும், இக்கழகத்தின் புரவலராக தமிழறிஞா் ஆறு. அழகப்பன், பேராளராக எஸ்கேஎம். பெரியகருப்பன் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.

புதிய உறுப்பினா்களாக பி.வி. சுவாமி, சி. ரவி, ஷேக் அப்துல்லா, நேஷனல் கேட்டரிங் கல்லூரி தாளாளா் எஸ். சையது, டி. சந்திரகுமாா், கவிஞா் பரம்பு நடராஜன், புலவா் ஆறு. மெய்யாண்டவா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ராம. அன்பழகன், கே. கோவிந்தராஜன், காரை சுரேசு ஆகியோா் அண்ணா தமிழ் கழகத்தில் சோ்க்கப்பட்டனா்.

இதில், வரும் 49 ஆம் ஆண்டு அண்ணா விழாவை தமிழக அமைச்சா் துரைமுருகன் தலைமையில் நடத்துவதென்றும், தமிழக அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் ஆலோசனையின்படி விழா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதென்றும் தீா்மானிக்கப்பட்டன. முடிவில், அண்ணா தமிழ் கழக இணைச் செயலா் பா. கணேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT