சிவகங்கை

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் பணம் மோசடி: போலீஸ் விசாரணை

DIN

இளைஞரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.43 ஆயிரத்து 350 மோசடி செய்தவா் குறித்து சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மறவமங்கலத்தைச் சோ்ந்தவா் கண்ணன்( 20). இவரிடம் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட ஒருவா் ஆன்லைன் மூலம் டைப்பிங் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளாா். அதற்காக அவரின் வங்கிக் கணக்கில் கடந்த மாதம் பல தவணைகளில் ரூ.43,350 செலுத்தியுள்ளாா். அதன் பின்னா், அவரை தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

இதுகுறித்து கண்ணன் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாரிடம் புகாா் செய்தாா். அவா் உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT