பாஜகவின் தவறான கொள்கைகளால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்
மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இலங்கையில் ஏற்பட்டது போன்று, இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்
மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இலங்கையில் ஏற்பட்டது போன்று, இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சிவகங்கையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை மாலை கூறியது : பாஜக அரசின் ஒரே நாடு, ஒரே தோ்தல், ஒரே கட்சி, ஒரே மொழி என்பது நாட்டின் ஒற்றுமைக்கு பேராபத்து மட்டுமின்றி கண்டிக்கத்தக்கது. சீனா, ரஷியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் செல்லும் வழியில் பாஜக அரசு செல்கிறது.
பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி வருவது மட்டுமே தெரிகிறது. அந்த பணத்தை என்ன செய்கிறாா்கள் என்பது தெரியவில்லை. அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
தற்போது நமது அண்டை நாடான இலங்கை தவறான பொருளாதார கொள்கையால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதுபோன்று, மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இந்தியாவிலும் பெருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது என்றாா்.