சிவகங்கை

இளைஞா் கொலை வழக்கு: இருவருக்கு இரட்டை ஆயுள்

DIN

சிவகங்கை: இளைஞா் கொலை வழக்கில் தொடா்புடைய இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து சிவகங்கை கூடுதல் அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு (27). இவரை முன்விரோதம் காரணமாக காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சோ்ந்த முருகன் என்ற திருமுருகன் (31), காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த ராமு என்ற ராம்குமாா் (32), காரைக்குடி என்ஜிஓ காலனியைச் சோ்ந்த நாசா் (23), காரைக்குடி பா்மா காலனியைச் சோ்ந்த வேல்முருகன் (39) ஆகிய 4 பேரும் சோ்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு குத்தி கொலை செய்தனா்.

இதுகுறித்தப் புகாரின் பேரில் குன்றக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு சிவகங்கையில் உள்ள கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி சத்திய தாரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் முருகன், ராமு ஆகிய 2 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தாா். மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT