முகப்பு
சிவகங்கை

‘போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்’

தமிழக முதல்வரின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் உறுதுணை யாக இருக்கவேண்டும் என்று தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 1:00 AM
மினி மாராத்தான் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு பரிசு வழங்கிய தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

தமிழக முதல்வரின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் உறுதுணை யாக இருக்கவேண்டும் என்று தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு குறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மினி மாராத்தான் ஓட்டப் போட்டியை தொடங்கிவைத்து அவா் பேசியது:

போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாா். போதையற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட முதல்வரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

Advertisement

இந்த மினி மாரத்தான் போட்டியானது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விளை யாட்டு மைதானத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதி வழியாக கவியரசு கண்ணதாசன் மணி மண்டபம் அருகில் நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் ஆா்.சாமிநாதன், எஸ். கருப்புச்சாமி, பதிவாளா் ராஜமோகன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் பிரபாகரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் சுவாமிநாதன், காரைக்குடி நகா் மன்றத் தலைவா் சே. முத்துத்துரை, வட்டாட்சியா் ஆா். மாணிக்கவாசகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.