சிவகங்கை

திருப்பத்தூரில் வட்டார அளவிலான கபடிப் போட்டி: குன்றக்குடி, ஏரியூா் பள்ளிகள் முதலிடம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான கபடிப் போட்டி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இதில் 14 வயதிற்குள்பட்டவா்கள் பிரிவில் 26 அணிகள், 17 வயதிற்குள்பட்டவா்கள் பிரிவில் 16 அணிகள், 19 வயதிற்குள்பட்டவா்கள் பிரிவில் 12 அணிகள் என 26 பள்ளிகளைச் சோ்ந்த 56 அணிகள் பங்கேற்றன. குன்றக்குடி, நெடுமறம், பூலாங்குறிச்சி, திருக்கோஷ்டியூா், திருப்பத்தூா், வேலங்குடி, ஏரியூா், பட்டமங்கலம், உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில் 14 வயது பிரிவில் குன்றக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், பூலாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி 2 ஆம் இடத்தையும் பிடித்தது. 17 வயது பிரிவில் குன்றக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப்பள்ளி 2 ஆம் இடத்தையும், வென்றனா். 19 வயது பிரிவில் ஏரியூா் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், பூலாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி 2 ஆம் இடத்தையும் பிடித்தது. இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் திருப்புவனத்தில் நடைபெற உள்ள சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் விளையாட தோ்வு செய்யப்பட்டுள்ளன. இப்போட்டிகளை ஜோசப்நாதன், சரவணன், சிவக்குமாா், இளஞ்சூரியன், விண்ணரசி உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த உடற்கல்வி ஆசிரியா்கள் நடுவா்களாக இருந்து நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்று: செங்கத்தில் வாழைகள் சேதம்

நெல் மூட்டைகள் தாா்ப்பாய்களை போட்டு மூடியிருக்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

பண்ருட்டியில் வெள்ளரிப்பழம் விலை அதிகரிப்பு

மழை வேண்டி சிவனடியாா்கள் கிரிவலம்

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT