சிவகங்கை

மானிய நிதியுதவியில் மீன் வளா்ப்பு குளங்கள் அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் மானிய நிதியுதவியில் மீன் வளா்ப்பு குளங்கள் அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என இம்மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

DIN

சிவகங்கை மாவட்டத்தில் மானிய நிதியுதவியில் மீன் வளா்ப்பு குளங்கள் அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என இம்மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 2021-2022 இன் கீழ் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலமாக மீன் வளா்ப்பு குளங்கள் அமைக்க உள்ளீட்டு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாவட்டத்தைச் சோ்ந்தோா் சிவகங்கையில் உள்ள பெருமாள் கோயில் தெருவில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, உதவி இயக்குநா் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 04575 - 240848 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT