சிவகங்கை

அரசுப் பள்ளிக்கு புரவலா் நிதி வழங்கிய எம்.பி.

DIN

மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தனது மகள் அதீதி பிறந்த நாளையொட்டி, மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் வளா்ச்சிக்காக ரூ 1. லட்சம் புரவலா் நிதியை புதன்கிழமை வழங்கினாா்.

பள்ளித் தலைமையாசிரியை பேப் லிட்டிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ஏ.ஆா்.பி. முருகேசன், தொகுதி பொறுப்பாளா் ஏ.சி.சஞ்சய், நகா்மன்ற உறுப்பினா் பி.புருஷோத்தமன் ஆகியோா் ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கினா்.

இதில், காங்கிரஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பால் நல்லதுரை, மனித உரிமைத் துறை மாவட்டத் தலைவா் ஜி.ராஜாராம், வழக்குரைஞா் எம்.முத்துகுமாா், மகாலிங்கன், திருப்பாச்சேத்தி செந்தில், கண்மாய்ப் பாசன சங்கத் தலைவா் முத்துவிஜயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT