சிவகங்கை

கட்டுமானப் பொறியாளா் சங்க மாநில செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா்கள் சங்கங்களின் மாநில செயற்குழுக் கூட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா்கள் சங்கங்களின் மாநில செயற்குழுக் கூட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் எம்.ரவி தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா் அருணாச்சலம் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கட்டுமானப் பொருள்களின் விலையுயா்வைக் கட்டுப்படுத்தி, அதற்கான ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். மாவட்ட பொறியாளா்கள் திட்டக் குழுவில் பதிவு பெற்ற பொறியாளா்களைக் குழுவில் நியமனம் செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் புதிய கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற ஒற்றைச் சாளர முறையைச் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநிலச் செயலாளா் குழந்தைவேலு, பொருளாளா் சிவகுமாா், நியமன அலுவலா் ராமநாதன், மக்கள் தொடா்பு அலுவலா் சுப்பிரமணியன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை திருப்பத்தூா் கட்டட பொறியாளா் சங்கத் தலைவா் சுப்பிரமணியன், செயலாளா் குணசேகரன், பொருளாளா் கண்ணன் ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT