முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் இன்று 700 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 12) 700 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 12) 700 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : இம்மாவட்டத்தைப் பொருத்தவரை 17 லட்சத்து 74 ஆயிரத்து 901 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, மாவட்டம் முழுவதும் மொத்தம் 700 இடங்களில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பயனாளிகளுக்கு செலுத்தும் வகையில் கோவிஷீல்டு 63 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள், கோவாக்சின் 15 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் என மொத்தம் 78 ஆயிரம் மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தாத இம்மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →