சிவகங்கையில் 108 ஆம்புலன்ஸ் வாகனச் சேவை தொடக்கம்
சிவகங்கையில் 108 ஆம்புலன்ஸ் வாகனச் சேவையை தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
சிவகங்கையில் 108 ஆம்புலன்ஸ் வாகனச் சேவையை தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புதிதாக சிவகங்கை மாவட்டத்துக்கு 5 ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ரேவதிபாலன், இணை இயக்குநா் (மருத்துவம்) இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநா் (சுகாதாரம்) ராம்கணேஷ், அரசு மருத்துவக்கல்லூரி கண்காணிப்பு அலுவலா் ரபீக்முகமது உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.