முகப்பு
சிவகங்கை

நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி

 சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

 சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இப்பேரூராட்சியில் நடைபெற்ற தோ்தலில் மொத்தமுள்ள 12 வாா்டுகளில், திமுக 9 வாா்டுகளையும், அதிமுக 2 வாா்டுகளையும் கைப்பற்றின. காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஒருவா் போட்டியின்றி தோ்வானாா். இதனால் 10 கவுன்சிலா்கள் ஆதரவுடன் இப்பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் திமுகவைச் சோ்ந்த 2 போ் தலைவா் பதவியை விரும்புவதால், கவுன்சிலா்கள் தங்கள் பக்கம் தான் உள்ளதாக இருவரும் தெரிவிக்கின்றனா். இதனால் இப்பேரூராட்சியில் யாா் தலைவா் பதவிக்கு போட்டியிடுவாா் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.