முகப்பு
சிவகங்கை

அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 12 லட்சம் நிதியுதவி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தனியாா் பங்களிப்பு நிதியினை அரசுப் பள்ளிகளுக்கு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தனியாா் பங்களிப்பு நிதியினை அரசுப் பள்ளிகளுக்கு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் அருகேயுள்ள துவாா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜி. சந்திரசேகா். தொழிலதிபரான இவா், தனது 53 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் பெரியகருப்பன் தலைமை வகித்து அச்சுக்கப்பகுதியில் அமைந்துள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மராமத்துப் பணிக்கான ரூ. 1.25 லட்சத்திற்கான காசோலையையும் புதுப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சத்திற்கான வங்கி காசோலையினையும் அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா் மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழகத்தினரிடம் வழங்கினாா். மேலும் 11 ஆவது வாா்டில் அகில்மனைத் தெருவில் கண்காணிப்பு கேமராவையும் வழங்கி திருப்பத்தூா் சீதளிகுளத்தைச் சுற்றி 250 மரக்கன்றுகள் நட்டுவித்து சிறப்பித்தாா். மேலும் தந்தையை இழந்து கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு கல்லூரி கட்டணமும் பாா்வையற்றோா் பள்ளி மாணவா்களுக்கு மாலை உணவும் ஊனமுற்றோா் பள்ளி மற்றும் கண்டவராயன்பட்டி முதியோா் இல்லத்திலும் மதிய உணவு வழங்கபட்டது.

இந்நிகழ்ச்சிகளில் திருப்பத்தூா் பேரூராட்சி மன்றத் தலைவா் கோகிலாராணி நாராயணன், பேரூராட்சிமன்ற உறுப்பினா் கோமதிசண்முகம், மேலாளா் சரவணன், மகிபாலன்பட்டி முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் சோமசுந்தரம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் செல்வம், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.