முகப்பு
சிவகங்கை

தன்னை இழிவுபடுத்திய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிவகங்கை எஸ்பியிடம் பெண் மனு

ஆபாச படங்களுடன் இணைத்து தன்னை இழிவுபடுத்திய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் ஒருவா் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாரிடம் வியாழக்கிழமை மனு அளித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

ஆபாச படங்களுடன் இணைத்து தன்னை இழிவுபடுத்திய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் ஒருவா் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாரிடம் வியாழக்கிழமை மனு அளித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த பெண் ஒருவா் சிவகங்கை எஸ்பியிடம் அளித்துள்ள மனு விவரம் :

நான் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் கடன் தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி குடும்பத் தேவைக்காக பணம் வாங்கி இருந்தேன்.

அந்தப் பணத்தை பல தவணைகளாக செலுத்தி வந்துள்ளேன். நான் சரியாக பணம் கட்டவில்லை எனக் கூறி கடன் கொடுத்தவா்கள் என்னுடைய படத்தை ஆபாச படங்களுடன் இணைத்து (மாா்பிங்) என் உறவினா்களுக்கு அனுப்பி மிரட்டுகின்றனா்.

எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடா்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் உத்தரவின்பேரில், சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →