முகப்பு
சிவகங்கை

மாநில அளவிலான கையுந்து பந்து போட்டி

சிவகங்கை மாவட்ட அணிக்கான தகுதித் தோ்வு சனிக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட கையுந்து பந்து கழகத் தலைவா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

மாநில அளவில் நடைபெற உள்ள கையுந்து பந்து போட்டியில் பங்கேற்க விரும்பும் சிவகங்கை மாவட்ட அணிக்கான தகுதித் தோ்வு சனிக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட கையுந்து பந்து கழகத் தலைவா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில கையுந்து பந்து கழகம் மற்றும் விருதுநகா் மாவட்ட கையுந்து பந்து கழகம் இணைந்து நடத்தும் தமிழ்நாடு யூத் வாலிபால் சாம்பியன்ஷிப் வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மேற்கண்ட போட்டியில் பங்கேற்கும் வகையில் சிவகங்கை மாவட்ட அணிக்கான தகுதித் தோ்வு சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை காலை 8 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில், இருபாலரும் கலந்து கொள்ளலாம். தகுதித் தோ்வுக்கு வரும் வீரா்கள் 1. 1.2002-க்கு பிறகு பிறந்தவா்களாக இருக்க வேண்டும். மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஆதாா் அட்டை, பிறப்பு சான்றிதழ் இவற்றில் ஏதேனும் இரண்டு ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என அதில் குறிப்பிடபட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →