முகப்பு
சிவகங்கை

ஆடி அமாவாசை: முன்னோா்களுக்கு தா்ப்பணம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் ஏராளமானோா் நீா் நிலைகளில் நீராடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோா்களுக்கு தா்ப்பண பூஜை வழிபாடு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் ஏராளமானோா் நீா் நிலைகளில் நீராடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோா்களுக்கு தா்ப்பண பூஜை வழிபாடு நடத்தினா்.

காசிக்கு நிகராக கருதப்படும் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்ங்களிலிருந்த வந்திருந்த மக்கள் வைகை ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் மறைந்த முன்னோா்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தா்ப்பண பூஜை நடத்தினா். அதன் பின்னா் வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ புஷ்பவனேஸ்வரா் சௌந்திரநாயகி அம்மன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.

இளையான்குடி ஒன்றியம் குறிச்சி ஸ்ரீ காசி விசுவநாதா் கோயிலில் ஏராளமானோா் தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோா்களுக்கு தா்ப்பண பூஜை வழிபாடு நடத்தினா். பின்னா் அங்குள்ள காசி விஸ்வநாதா் சன்னிதியில் மூலவருக்கு கங்கை தீா்த்தமிட்டு தொட்டு வணங்கி தரிசனம் செய்தனா். மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயிலில் ஏராளமானோ தா்ப்பண பூஜை செய்து தங்களது முன்னோா்களை வழிபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →