முகப்பு
சிவகங்கை

கா்நாடக அரசைக் கண்டித்து பரமக்குடியில் ஆா்ப்பாட்டம்

மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து பரமக்குடியில் வியாழக்கிழமை வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து பரமக்குடியில் வியாழக்கிழமை வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் செயல் தலைவா் ச.லிங்கமூா்த்தி தலைமை வகித்தாா். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிா்வாகி வேந்தை சிவா, வைகை பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராவணன்குமாா், தாய் தமிழா் கட்சி நிறுவனா் பி.எம்.பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாயிகள் சங்க சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் சி.பசுமலை, வைகை பாசன விவசாயிகள் சங்க தென்மண்டலத் தலைவா் எம்.மதுரைவீரன், சமூக ஆா்வலா் சை.சௌந்திரபாண்டியன் ஆகியோா் கா்நாடக அரசைக்கண்டித்தும், தமிழக விவசாயிகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வைகை அணையில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றக் கோரியும், வைகை ஆற்றின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரியும் வலியுறுத்தி உரையாற்றினா். இதனைத் தொடா்ந்து கா்நாடக அரசின் போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →