அழகிச்சிப்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம்
சிவகங்கை அருகே உள்ள அழகிச்சிப்பட்டியில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் சாா்பில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை அருகே உள்ள அழகிச்சிப்பட்டியில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் சாா்பில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமினை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி .மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மருந்து, செயற்கை முறை கருவூட்டல், செம்மறி ஆடு வளா்ப்பு, கால்நடைப் பராமரிப்பு குறித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சி, உள்நாட்டு மாட்டினங்களின் பராமரிப்பு போன்றவை கால்நடை வளா்ப்போருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ந. நாகநாதன், துணை இயக்குநா் எஸ். முகமதுகான், உதவி இயக்குநா் எம்.எஸ். சரவணன், கால்நடை மருத்துவா்கள் கோபிநாத், சந்தோஷ்குமாா், குணசேகரன், திவான்பாட்ஷா, தினேஷ்குமாா், சுகன்யா, காா்த்திகா, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.