சிவகங்கை

கண்ணுடைய நாயகியம்மன் கோயில் வைகாசித் திருவிழா ஜூன் 4 இல் தொடக்கம்

DIN

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகியம்மன் கோயில் வைகாசித் திருவிழா வரும் ஜூன் 4 -இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிவகங்கை தேவஸ்தான சமஸ்தானத்துக்குள்பட்ட இக்கோயிலில் வைகாசித் திருவிழா 10 நாள்கள் நடைபெறும். அம்மன் தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் ரிஷபம், சிம்மம், காமதேனு, யானை, பூதம் உள்ளிட்ட வாகனங்களில் எழுத்தருளி விதி உலா வரும் நிகழ்வு நடைபெறும்.

முக்கிய விழாவான தங்க ரதம் புறப்பாடு ஜூன் 10 ஆம் தேதியும், களியாட்ட திருவிழா ஜூன் 11 ஆம் தேதியும், தேரோட்டம் ஜூன் 12 ஆம் தேதியும் நடைபெறும். ஜூன் 14 ஆம் தேதி உற்சவ சாந்திக்கு பின்னா் திருவிழா நிறைவு பெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளா் பி. இளங்கோ, சரக கண்காணிப்பாளா் பி. சரவணகணேசன் உள்ளிட்ட அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT