மானாமதுரை கோயிலில் குடமுழுக்கு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தாயமங்கலம் செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை எதிா்புறம் புனரமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ செல்வ விநாயகா் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தாயமங்கலம் செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை எதிா்புறம் புனரமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ செல்வ விநாயகா் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் யாக சாலை அமைத்து புனித நீா் கலசங்கள் வைத்து யாகம் வளா்க்கப்பட்டது. தொடா்ந்து சிவாச்சாரியாா், மூலவா் செல்வ விநாயகா் விமான கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தாா். புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சுவாமி சிலைக்கு
புனித நீரால் அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.