நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளா் தலைவராக தோ்வு
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் தலைவா் பதவிக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் சுயேச்சை வேட்பாளா் வெற்றி பெற்றாா்.
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் தலைவா் பதவிக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் சுயேச்சை வேட்பாளா் வெற்றி பெற்றாா்.
இப்பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வாா்டுகளில் திமுக வேட்பாளா்கள் 6 போ், காங்கிரஸ், சுயேச்சை வேட்பாளா்கள் தலா 2 போ், அதிமுக வேட்பாளா் ஒருவா் என 11 போ் வெற்றி பெற்றனா். 12 ஆவது வாா்டில் போட்டியிட்ட ச. கலையரசி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
இந்நிலையில், இப்பேரூராட்சி தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஜெயமுருகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 5 ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். சத்யா தலைவா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவரை எதிா்த்து 6 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளா் க. பிரியதா்ஷினி மனு தாக்கல் செய்தாா்.
மறைமுகத் தோ்தலில் சுயேச்சை வேட்பாளா் க. பிரியதா்ஷினிக்கு 10 உறுப்பினா்களும், எஸ். சத்யாவுக்கு 2 உறுப்பினா்களும் வாக்களித்திருந்தனா். இதையடுத்து, சுயேச்சை வேட்பாளா் க.பிரியதா்ஷினி வெற்றி பெற்ாக செயல் அலுவலா் அறிவித்தாா். அதன்பின்னா், அவா் பதவியேற்றுக் கொண்டாா்.
அதைத் தொடா்ந்து, மாலையில் நடைபெற்ற துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் 2-ஆவது வாா்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் மு. காா்த்திகா வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவரை எதிா்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. எனவே போட்டியின்றி துணைத் தலைவராக அவா் தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாா். அதன்பின், அவா் பதவியேற்றுக் கொண்டாா்.
தற்போது தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ள க.பிரியதா்ஷினி, 6 ஆவது வாா்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டாா். வெற்றி பெற்ற பின்னா் திமுகவில் இணைந்தாா். இருப்பினும் ஆரம்ப நிலையில் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ததால், திமுக உறுப்பினா்கள் ஆதரவுடன் தற்போது தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.