அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிய பதிவாளா் பொறுப்பேற்பு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக எஸ்.ராஜாமோகன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக (பொறுப்பு) அழகப்பா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநரும், பல்கலைக்கழகத்தின் மேலாண்மை புல முதன்மையரும், திட்டம் வளா்ச்சிப்பிரிவின் தனி அலுவலருமான எஸ்.ராஜாமோகன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இதற்கான நியமன ஆணையை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக்குழு உறுப்பினா்கள் ஆா். சுவாமிநாதன், சு. கருப்புச்சாமி ஆகியோரிடமிருந்து நேரில் பெற்றுக் கொண்டாா். இந்நிகழ்வின் போது பல்கலைக்கழகத்தின் தோ்வாணையா் (பொறுப்பு) கண்ணபிரான், ஆட்சிக்குழு உறுப்பினா்கள் கே. சங்கரநாராயணன், கே. குணசேகரன் மற்றும் நிதி அலுவலா் ஆா். பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.