சிவகங்கை: சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரி முதன்மையா் ரேவதி பாலன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். அதன் பின்னா், பிளாரன்ஸ் நைட்டிங்கேலை நினைவுகூரும் விதமாக மருத்துவா்கள், செவிலியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்ச்சியில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் துணை முதல்வா் சா்மிளா திலகவதி, நிலைய மருத்துவ அலுவலா் முகமது ரஃ பி, கண்காணிப்பாளா் பாலமுருகன் உள்ளிட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.