சிவகங்கை

சிவகங்கையில் மே 27-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா்க்கும் முகாம்

DIN

சிவகங்கையில் வரும் மே 27-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் மே 27 காலை 10 மணிக்கு, சிவகங்கை கோட்ட அளவில் நடைபெற உள்ள இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆதாா் அட்டைப் பதிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுதவிர, தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் பெற விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படும். இம்முகாமில் சிவகங்கை கோட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT